சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: -
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் நாளையும் மழை தொடரும். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.