அதிமுக அணிகள் இணைப்பு: ஓ. பன்னீர் செல்வம் அணி நாளை ஆலோசனை 

தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  
அதிமுக அணிகள் இணைப்பு: ஓ. பன்னீர் செல்வம் அணி நாளை ஆலோசனை 

தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும்  என கூறினார்.  

இந்த இரண்டு உத்தரவுகளுமே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விதித்த நிபந்தனைகள் ஆகும். இந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொண்டுள்ளதால் இரு அணிகளும் இணைவது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து. நாளை காலை ஓ. பன்னீர் செல்வம் அணியினர் நாளை கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com