சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று மழை பெய்தது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னைவானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து சென்னையின் புறநகர் பகுதிகளான, ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருநின்றவூர் மற்றும் எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, உட்பட பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்தது.