ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதல்வரின் உத்தரவுக்கு அப்பல்லோ நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்படும். விசாரணை ஆணையத்தின் தலைமை நீதிபதி பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அப்பல்லோ நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் விசாரணையின் மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தகைய உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது தெரியவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.