ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி

சென்னை:   சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். பல்வேறு தரப்பில் எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையிலும் ஓ. பன்னீர் செல்வம் அணியினர் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

மேலும் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்றும் தெரித்தார். 

முதல்வர் பழனிசாமியின் இந்த இரு முக்கிய அறிவிப்புகளை அடுத்து, அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com