உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர் நகரில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
பூரி - ஹரித்வார் - கலிங்கா விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டது. இதில் 5 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர். விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது.
அப்பகுதி மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ரயில் போக்குவரத்து அதிமுள்ள பாதையில் விபத்து ஏற்பட்டதால் மற்ற ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.