அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சில கருத்து வேறுபாடுகள் பேச்சு வார்த்தை மூலம் சரிசெய்யப்பட்டுள்ளது. மேகதாது விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் விமர்சனம் தவறானது.
கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு நீதிமன்றத்தில் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வெளியான செய்தி தவறானது என்று கூறினார்.