தமிழக ரயில்வே திட்டங்கள்:  காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் அமைச்சர் சுரேஷ் பிரபு 

தமிழகத்தில் ரயில் நிலைய வசதிகள் உள்ளிட்ட பல திட்டங்களை காணொலிகாட்சி மூலம் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.
தமிழக ரயில்வே திட்டங்கள்:  காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் அமைச்சர் சுரேஷ் பிரபு 

தமிழகத்தில் ரயில் நிலைய வசதிகள் உள்ளிட்ட பல திட்டங்களை காணொலிகாட்சி மூலம் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வறை, எல்இடி விளக்கு வசதி, திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பாலம், கிண்டி ரயில் நிலைய மேற்கு பகுதியில் மீண்டும் பயணச்சீட்டு மையம், சேப்பாக்கம் இரயில் நிலையத்தில் 2 நகரும் படிக்கட்டுகள் செங்கல்பட்டு, காட்பாடி ரயில் நிலையங்களில் கம்பியில்லாத வை-ஃபை இணைய வசதி, காட்பாடி ரயில் நிலையத்தில் தகவல் மையம், கண்காணிப்பு கேமரா வசதி, அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஃபுட் பிளாசா ஆகியவற்றை மத்திய ரயில்வே துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

கோவாவில் இருந்து திட்டங்களை துவக்கி வைத்த அவர் மிக குறுகிய காலத்தி்ல் இந்த வசதிகள் செயல்பட்டு பயணிகளின் உபயோகத்திற்கு அர்ப்பணிக்கப்ப ட்டுள்ளது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com