பாகிஸ்தான் நாட்டு அன்னை தெரசா என்றழைக்கப்பட்ட ருத் கேத்தரினா மார்த்தாவின் உடல் அதிபர் மம்னூன் உசைன் முன்னிலையில் இன்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
பாகிஸ்தான் நாட்டு அன்னை தெரசா என்றழைக்கப்பட்ட ருத் கேத்தரினா மார்த்தா (87) கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் கடும் அவதிப்பட்டு வந்தார். கடந்த பத்தாம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது மறைவுக்கு பாகிஸ்தானில் உள்ள முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். ருத் கேத்தரினா மார்த்தாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக கராச்சி நகரில் வைக்கப்பட்டிருந்த ருத் கேத்தரினா மார்த்தாவின் இறுதி அஞ்சலி இன்று நடைபெற்றது. 19 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.