சென்னை: மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் வரும் 22-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.
இதுகுறித்து வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் வராக் கடன் காரணமாக வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வங்கிகளை தனியார் மயமாக்க முயற்சி நடக்கிறது எனவே மத்திய அரசை கண்டித்து வரும் 22-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளோம்.
இந்த போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.