இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

தம்புல்லா: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இன்று மோதியது. முதல் ஒருநாள் போட்டி தம்புல்லாவில் இன்று நடைபெற்றது. பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றுவந்த இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு  துவக்க வீரர்கள் டிக்வெல்லா, குணதிலகா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்து நல்ல துவக்கத்தை தந்தது. 35 ரன்கள் எடுத்த நிலையில் குணதிலகா ஆட்டமிழந்தார்.

பின்னர் மெண்டீசுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய டிக்வெல்லா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக டிக்வெல்லா 64, குணதிலகா 35, மெண்டிஸ் 36, மேத்தியூஸ் 36 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் படேல் 3, சஹால் 2, ஜாதவ்,பும்ராஹ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் இலங்கை அணி 217 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 28.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் ஷிகர் தவான் 132 ரன்களும், விராட்கோலி 82 ரன்களும் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com