சென்னை: தில்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: - பொதுத்துறை வங்கிகளின் ஒருங்கிணைப்பு கட்டமைப்பை மேற்பார்வையிட அமைச்சர்கள் குழு அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் வலுவான வங்கிகளை உருவாக்குவதுதான் இதன் நோக்கம் என்றும் ஓபிசிக்களின் துணை வகைப்படுத்தலை ஆய்வு செய்ய ஒரு ஆணையம் அமைக்கப்படும்.
அந்த ஆணையத்திற்கு தலைவர் நியமிக்கப்பட்ட பின் 12 வாரங்களுக்குள் ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் ராஜினாமா குறித்து கேட்ட போது பிரதமர் மோடி தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.