திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை காலை 10.30 மணிக்கு ஆளுநருடன் சந்திப்பு

ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை மும்பையில் இருந்து சென்னை வந்தார். அவர் தனது அலுவலகம் வந்ததும்,
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை காலை 10.30 மணிக்கு ஆளுநருடன் சந்திப்பு

ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை மும்பையில் இருந்து சென்னை வந்தார். அவர் தனது அலுவலகம் வந்ததும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அளித்த மனு மீது தனது முடிவை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வரும் தி.மு.க., ஆளுநரை சந்திப்பதற்காக நேரம் கேட்டுள்ளது.

இந்நிலையில் ஆளுநரை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை காலை 10.30 மணிக்கு சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்பின் போது  துரைமுருகன், கனிமொழி, ஜெ.அன்பழகன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடன் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com