சென்னை: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று சென்னை வர உள்ளார்.
வெங்கய்யா நாயுடு துணைக் குடியரசுத் தலைவர் ஆன பின் அவர் சென்னை வருவது இதுவே முதல்முறை. சென்னை வரும் அவரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசவுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகலில் நடைபெறவிருக்கும் இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.