சரியாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியார் எடுத்து நடத்த அனுமதிக்கலாம்: நிதிஆயோக் பரிந்துரை

சரியாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியார் எடுத்து நடத்த அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு நிதிஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
சரியாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியார் எடுத்து நடத்த அனுமதிக்கலாம்: நிதிஆயோக் பரிந்துரை

புதுதில்லி:  சரியாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியார் எடுத்து நடத்த அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு நிதிஆயோக் பரிந்துரை செய்துள்ளது.

அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கான திட்ட அறிக்கையை இன்று நிதிஆயோக் வெளியிட்டுள்ளது.

இதில்  2010 -2014- ம் ஆண்டில் 13,500 அரசுப் பள்ளிகள் அதிகரித்துள்ளது. எனினும் அரசுப் பள்ளிகளில் 1.13 கோடி மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. அதேசமயம் தனியார் பள்ளிகளில் ஒரு கோடியே 65 லட்சம் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. 

2014-2015- ம் ஆண்டில்  3.7 லட்சம் பள்ளிகளில் வெறும் 50க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.எனவே சரியாக செயல்பட முடியாத நிலையில் உள்ள அரசுப் பள்ளிகளை தனியாருடன் இணைந்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு நிதிஆயோக் பரிந்துரை செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com