ஒக்கி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்றும் கன மழை பெய்து வருகிறது.
தொடர் கனமழை பெய்து வருவதால் திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோயில், மானாமதுரை, இளையான்குடி மற்றும் திருப்புவனம் உள்ளிட்ட 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.