பாலி தீவில் எரிமலை குமுறி வருவதால் மக்களை வெளியேற்ற இந்தோஷிய அரசு முயற்சித்தும் மக்கள் வெளியேற தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இந்தோனேஷியாவில் பாலி தீவில் எரிமலை அச்சுறுத்தல் இருந்தாலும் அப்பகுதியில் வாழந்து வரும் கிராமத்து மக்கள் ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர். ஆகுங் எரிமலையில் இருந்து தினமும் கரும்புகை வெளியேறி வருகிறது.
இந்நிலையில், சுற்றுப்புற மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தாலும் அப்பகுதி மக்கள் சொந்த ஊரை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர். இதனால் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பதற்றமும் பரப்பரப்பும் நிலவி வருகிறது.