கேரளாவில் மது குடிப்போருக்கான குறைந்த பட்ச வயது வரம்பை 23 ஆக அதிகரிக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதை தடுத்திடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், இந்த சட்டமசோத ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநில சட்ட மசோதாவில் தேவையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் மாநில மகளிர் ஆணையத்தின் அதிகாரங்களை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.