மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை விபத்தில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
நண்பர் ஒருவரின் மகனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக புகழேந்தி பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வந்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்தபோது அவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலம் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் புகழேந்தி காயமடைந்தார். இந்த விபத்தில் காயமடைந்த புகழேந்திக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக புகழேந்தியை மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.