மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 287.25 புள்ளிகள் உயர்ந்து 32,884.43 புள்ளிகளாக உள்ளன. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 104 புள்ளிகள் உயர்ந்து10,148.10 புள்ளிகளாக இருந்தன.
மும்பை பங்குச் சந்தையில் அனைத்து பிரிவு பங்குகளும் அதிக அளவில் வர்த்தகம் செய்யப்பட்டன. இதன் மூலம் பங்கு விலை 2.60% உயர்ந்து, மூலதன பொருட்கள் 1.95%, சக்தி 1.91% மற்றும் நுகர்வோர் பொருட்கள் 1.89% அதிகரித்தன.