ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடி செய்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் ஜெ. தீபா புகார் கொடுத்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிட வேண்டி வேட்புமனுதாக்கல் செய்தார். வேட்புமனுவில் உள்ள 26 ஐ என்ற பிரிவை தீபா முழுமையாக பூர்த்தி செய்யவில்லை . வேட்பாளரின் குற்றப்பின்னணி பற்றிய விவரங்களும், சொத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டிய 26 வது பிரிவைப் பூர்த்தி செய்யாததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து தீபா பேசினார்.
இந்த சந்திப்பின் போது தமது வேட்புமனுவை நிராகரித்தது குறித்து லக்கானியிடம் தீபா புகார் மனு அளித்துள்ளார். தமது வேட்புமனுவை யாரோ மாற்றிவிட்டதாகவும் தான் வேட்புமனுவில் எதையும் பூர்த்தி செய்யாமல் விடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.