ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி குழித்துறையில் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முதல்வர் பழனிசாமி நேரில் வந்து உறுதியளிக்கக் கோரியும் குழித்துறை ரயில் நிலையத்தில் சுமார் 12 மணி நேரமாக கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தூத்தூர் பங்குத் தந்தை ஆண்ட்ரூஸ் விடுத்த அழைப்பை ஏற்று மீனவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் ரயில்கள் இயங்கின.