நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை 5 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்து கைது செய்துள்ளனர்.
நெடுந்தீவு மற்றும் கச்சதீவு அருகே நள்ளிரவில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை காங்கேசன் துறைமுக கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் 50க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.