ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்குப் பதிவை நேரலையாக ஒளிபரப்பக்கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மனு

ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்குப் பதிவை நேரலையாக ஒளிபரப்பக்கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 
ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்குப் பதிவை நேரலையாக ஒளிபரப்பக்கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மனு

ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்குப் பதிவை நேரலையாக ஒளிபரப்பக்கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க 1,800 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுவரை 2 கம்பெனியை சேர்ந்த 272 துணை ராணுவத்தினர் தொகுதிக்குள் வந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் இன்னும் ஓரிரு நாளில் வர இருக்கின்றனர்.

தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 8 அதிகாரிகளும் தொகுதி முழுவதும் சுற்றி வந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, தேர்தல் விதிமீறல் தொடர்பாக 148 புகார்கள் வந்துள்ளன. அதுதொடர்பாக, 15 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரொக்கப் பணமும் ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி முழுவதும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 284 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ரகசியமாகவும் கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படுகிறது. 

இந்நிலையில்  அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்ப கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மனுதாக்கல் செய்துள்ளார். ஆர்.கே. நகரில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com