தற்போதைய செய்திகள்
காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டது
ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டது.
ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டது.
பெரியபாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கறுப்பு பேட்ஜூடன் முதலமைச்சர் பழனிசாமி அங்கு சென்றுள்ளார்.
மேலும் துணை முதலமைச்சர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகளும் பெரியபாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். உறவினர்கள், மற்றும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அஞ்சலிக்குப் பின்னர் விமானம் மூலம் மதுரை கொண்டு செல்லபட்டு பின்னர் சாலை மார்க்கமாக அவர் சொந்த ஊரில் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள சாலைப் புதுருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதையடுத்து அரசு மரியாதையுடன் அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.