புதுதில்லி: நாளை பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், இன்று அனைத்து கட்சி கூட்டம் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வரும் 15 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 14 அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க மத்திய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ், அதிமுக, திமுக, சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், உள்பட பல்வேறு கட்சிகளைச்சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.