சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு: குற்றவாளி அமீருல் இஸ்லாமிற்கு தூக்குத்தண்டனை 

கேரளா பெரும்பாவூரில் சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட
சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு: குற்றவாளி அமீருல் இஸ்லாமிற்கு தூக்குத்தண்டனை 

எர்ணாகுளம்:  கேரளா பெரும்பாவூரில் சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி அமீருல் இஸ்லாமிற்கு தூக்குத்தண்டனை வழங்கி எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்தவர் ஜிஷா(வயது 30). தலித் இனத்தை சேர்ந்த சட்ட மாணவி. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28–ந்தேதி இவர் வீட்டில் இருந்த போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்க கூடுதல் டி.ஜி.பி.சந்தியா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்தில் பதுங்கி இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அம்ரூல் இஸ்லாமை(23) போலீசார் கைது செய்தனர்.

ஓராண்டாக நடந்த இந்த வழக்கு விசாரணையில்  அமீருல் இஸ்லாம், கொலை செய்ததற்கான ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி என நேற்று முன் தினம் நீதிபதி தீர்ப்பளித்தார். எனினும் தண்டனை விவரம் குறித்து எதுவும் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று குற்றவாளி அமீருல் இஸ்லாமிற்கு தூக்குத்தண்டனை வழங்கி எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com