ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் 4 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்தி அளிப்பதாக தீபக் தெரிவித்தார். மேலும் ஆறுமுகசாமியின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தேன். விசாரணை அதிகாரி குடும்ப விவரங்களை கேட்டறிந்தார்.
அனைத்து தகவல்களையும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். சந்தேகம் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அனைவரையும் விசாரிக்க வேண்டும் என கூறி உள்ளேன் என்று கூறினார்.