சென்னை காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ராஜஸ்தானில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் அளித்த புகாரின்பேரில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்தரன்பாலி காவல்நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என்று தெரியவந்துள்ளதாக ராஜஸ்தான், பாலிக் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ் தெரிவித்துள்ளார்.