சிலி நாட்டில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
சிலி நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள சுற்றுலா பகுதியான வில்லா சாண்டா லூசிய என்ற பகுதியில், நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 15க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அபக்குதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, சிலி நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.