புதுதில்லி: காங்கிரஸ் கட்சி பதவிகளில் மாற்றங்கள் நிகழப்போகிறது எனவும், அப்போது புதுமுகங்களுக்கே வாய்ப்பு அளிக்கப் போவதாக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கட்சியின் இளைஞரணியில் பணியாற்றியபோது பல வெற்றிகரமான செயலாக்கங்கள் ஏற்பட்டதாக ராகுல் சுட்டிக்காட்டிய ராகுல், தமது தலைமையின் கீழ் இளமையான, சக்திவாய்ந்த பலர் காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளில் இடம் பெறப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மூத்த தலைவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்பது அர்த்தமல்ல என விளக்கமளித்த ராகுல், கட்சியில் பொறுப்பு வகிக்கவுள்ள இளைஞர்கள், மிகவும் சுவாரஸ்மானவர்களாகவும், ஒழுக்கமான அதே சமயம் திடமானவர்களாகவும் இருப்பார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.