ஹிமாசலப் பிரதேசத்தில் அரியாசனத்தில் அமர்கிறது பாஜக!

ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியை விட
ஹிமாசலப் பிரதேசத்தில் அரியாசனத்தில் அமர்கிறது பாஜக!

ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியை விட பாஜக பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

68 தொகுதிகளை கொண்ட ஹிமாசப்ல பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 338 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் 75.28 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. 42 மையங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்றும், ஆளும் காங்கிரஸ் கட்சியானது பின்னடவை சந்தித்தும் வருகிறது. 

ஆட்சி அரியாசனத்தில் அமர தேவையான 36 இடங்களில் பாஜக சுமார் 40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், ஆளும் காங்கிரஸ் கட்சி வீழ்த்தி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com