தினகரன் 1998ல் தான் மக்களவை தேர்தலில் நின்றார். தினகரனைவிட 18 ஆண்டுகள் அரசியலில் நான் சீனியர். ஆனால் அவர் என்னை அரசியலில் வளர்த்துவிட்டதாக தினகரன் கூறுகிறார்.
தினகரன் கூறுவது எல்லாமே பொய்தான். அந்தந்த நேரத்தில் என்ன தேவையோ அதை பேசிவிட்டு போகிறவர்தான் தினகரன். சாதாரணமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போதுகூட, என் ஒரு முகத்தை தான் பார்த்திருக்கிறீர்கள். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அதை தேவைப்படும்போது நான் காட்டுவேன் என தினகரன் கூறுவார். அதேபோல, தான் ஒரு 420 என்பதை தினகரனே கூறுவார். என்று ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் புகாருக்கு டிடிவி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது ரூ.20 நோட்டைக் கொடுத்து கடன் சொல்லி வாக்கு வாங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
ஆர்.கே.நகரில் தோல்வி அடைந்தவர்கள் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து தான் வாக்களித்தனர். கட்சியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும் வாய்ப்பை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர் தான் ஓ.பன்னீர்செல்வம். உண்மையான தொண்டர்கள் அனைவரும் என் பக்கம் உள்ளனர்.