மால்டா: மேற்குவங்க மாநிலத்தில் குலப்குஞ்ச் மார்க்கெட் பகுதியில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் தங்களின் பெயர் அனுல் ஹக் மற்றும் ரேனு மோன்டல் என்றும் இருவரும் மால்தாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கடந்த 26-ஆம் தேதியும் மால்டாவில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்களுடன் ஒருவரை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.