முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்குதான் அதிமுகவுக்கு தலைமை ஏற்கும் தகுதி உள்ளதாக ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அத்துடன் டிடிவி தினகரன் தலைமையை தம்மால் ஏற்க முடியாது; அதிமுகவுக்கு தலைமை ஏற்கும் தகுதி தினகரனுக்கு இல்லை எனவும் தீபக் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகியான வைகைச் செல்வன், தீபக்கை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், தினகரனுக்கு எதிராக தீபக் கருத்து தெரிவித்திருப்பது வியப்பளிப்பதாகவும், கருத்து வேறுபாடு இருந்தால் பேசித் தீர்க்கலாம் என்றும் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.