வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்கநகை திருட்டு

வந்தவாசியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்கநகை உள்ளிட்டவை திருட்டு போனது தொடர்பாக போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வந்தவாசி: வந்தவாசியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்கநகை உள்ளிட்டவை திருட்டு போனது தொடர்பாக போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  வந்தவாசி கெஜலட்சுமி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(35). இவர் புதன்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் உடல்நிலை சரியில்லாத தனது உறவினரை பார்ப்பதற்காக செங்கல்பட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் வியாழக்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்தபோது கட்டிலின் அடிப்பகுதியில் வைத்திருந்த 10 சவரன் தங்கநகை, ரூ.4 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com