தமிழக காவல்துறையைக் கண்டித்து புதுவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை தாக்கிய தமிழக காவல்துறையைக் கண்டித்து புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அண்ணா சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை தாக்கிய தமிழக காவல்துறையைக் கண்டித்து புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அண்ணா சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்ற மோடி அரசின் செயலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைப் போக்க வலியுறுத்தி சென்னை பள்ளிக்கரணையில் போராட்டம் நடத்திய வாலிபர் சங்கத்தினரை தமிழக காவல்தறையினர் தாக்கி விரட்டினர்.
இதைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. அதன்படி புதுச்சேரியில் அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ரது. மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.பெருமாள், முருகன், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் மதிவாணன், நடராஜன், தமிழ்ச்செல்வன், உலகநாதன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com