சென்னை: வடபழனியில் உள்ள ஃபோரம் மால் வணிக வளாகத்தில் செயல்படும் தியேட்டரில் திரைப்படத்தை திரையிடும் முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
சிலர் எழுந்து நிற்காததால் அதை தட்டு கேட்டவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே கைகலப்பு நடந்துள்ளது. சென்னை வடபழனியில் ஃபோரம் மாலில் உள்ள தியேட்டர் ஒன்றில் இன்று திரைப்படத்தை ஒளிப்பரப்புவதற்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது படம் பார்க்க வந்திருந்த நான்கு ரசிகர்கள் எழுந்து நிற்கவில்லை என கூறப்படுகிறது.
இதனை அருகில் இருந்தவர்கள் கண்டித்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
இதுதொடர்பாக தியேட்டர் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் 4 பேரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த தகராறால் தியேட்டரில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.