சென்னை: மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் நீக்கப்பட்டார். அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவுக்காக, மூன்று ஜோதிடர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர்; மற்ற இருவரும், மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள். இம் மூவரிடமும், தனித்தனியாக ஜோதிடம் கேட்கப் படும். இந்த மூன்று ஜோதிடர்களின் கணிப்புகளில், ஒன்றாக இருக்கும் விஷயத்தை மட்டும், சசிகலா ஏற்றுக் கொள்வாராம்.
அ.தி.மு.க., பொதுக்குழு கூடிய தேதி, பொதுச் செயலராக பதவி ஏற்ற நாள் ஆகியவற்றை, இந்த ஜோதிட குழுதான்கணித்து கொடுத்துள்ளது. மேலும் சசிகலா முதல்வராக பதவியேற்க ஏதுவான நாள் ஜனவரி 12 அல்லது ஜனவரி 18 ம் தேதி என்று இந்த ஜோதிட குழுவினர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.