நரையன்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான மாநில அரசு விருது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு
நரையன்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான மாநில அரசு விருது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான தமிழக பள்ளிக் கல்வித் துறையின் விருது கிடைத்துள்ளது.

இந்த விருது வழங்கும் விழா நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் தலைமை நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி, ஆங்கில பட்டதாரி ஆசிரியை பா.பாத்திமா ஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார்.

மாநில அரசின் சிறந்தப் பள்ளிக்கான விருதை ஆசிரியர்களிடம் வழங்கி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பள்ளியின் கல்வி சார் செயல்பாடுகள், சுற்றுப்புறத் தூய்மை, மாணவர்களின் கற்றல் அடைவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை திடீர் ஆய்வு மேற்கொண்ட பல்வேறு அலுவலர்கள் அடங்கிய குழு, இப் பள்ளியை சிறந்தப் பள்ளிக்கு மாநில தொடக்கக் கல்வித் துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இப் பள்ளிக்கு விருது கிடைத்துள்ளது தொகுதிக்கே கிடைத்துள்ள பெருமையாக கருதுகிறேன். தொடர்ந்து ஆசிரியர்கள் ஒற்றுமையுடன் பணிபுரிந்து மாணவர்கள் நல்ல குடிமக்களாக உருவாக பாடுபட வேண்டு என்றார் அவர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ச.பொன்மலர், பள்ளி கிராம கல்விக் குழுத் தலைவி அ.சீத்தாலட்சுமி, உறுப்பினர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் செ.சண்முகநாதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com