தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி: சிவா எம்.எல்.ஏ. வழங்கினார்

கரிக்கலாம்பாக்கம்பேட்டில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா, எம்.எல்.ஏ., புதன்கிழமை நிவராணப் பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார். 

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம்பேட்டில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா, எம்.எல்.ஏ., புதன்கிழமை நிவராணப் பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார்.

ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட கரிக்கலாம்பாக்கம் பேட் பகுதியில் வசிக்கும் எட்டியப்பன், அண்ணாமலை, சாந்தி, சிவகாமி, வெண்ணிலா சங்கர், ஏகாம்பரம் ஆகியோரின் 6 வீடுகள் செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமாயின.

இந்நிலையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில், நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமகிருஷ்ணன், ஏம்பலம் தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன், துணை செயலாளர் பலராமன், பொருளாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தெற்கு மாநில கழக அமைப்பாளர் இரா. சிவா, எம்.எல்.ஏ., தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி, பாய், போóர்வை, பாத்திரம் உள்ளிட்ட நிர்வாணப் பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார். மாநில பொருளாளர் சண். குமாரவேல், தொகுதி கழக செயலாளர்கள் சக்திவேல், லோகு, டி.என். பாளையம் ரவி பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com