ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார். ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்த அவர் நாளை சென்னை வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் ஞாயிறு அன்று அவர் சென்னை வர திட்டமிட்டிருந்த நிலையில் முன்கூட்டியே வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.