தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தால் ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசும் இந்த பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. மத்திய அரசும் இந்த விஷயத்தில் முழுவீச்சில் செயல்படுவதாக தெரிகிறது.
இதையடுத்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அவசர சட்ட வரைவுக்கு சிறிய திருத்தங்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் போராட்ட களத்தில் உள்ள மாணவர்கள் அவசர சட்டம் எங்களுக்கு தேவையில்லை. நிரந்தர தீர்வு வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.