அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இன்றே தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அலங்காநல்லூரில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியை தொடங்கி வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. இருப்பினும் அலங்காநல்லூர் மக்கள் அமைதி வழியில் இன்னும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடப்பதற்கான வாய்ப்பில்லை.
அலங்காநல்லூரிற்கு முதல்வர் வந்தால் அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளதால், முதல்வர் தனது அலங்காநல்லூர் பயணத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.