பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கோரிய மனு தள்ளுபடி

சென்னை:  தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையை சேர்ந்த முருகவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவில் நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலகு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கெஹர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com