இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபடுவதாக இரு நாடுகளும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில், தரையிலிருந்து குறைந்த தூரம் சென்று இலக்கை தாக்கும் ’நாஸ்ர்’ என்ற ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் பரிசோதனை செய்துள்ளது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவேறியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.