குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக நாம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் வேட்பாளராக மீரா குமாரும் உள்ளனர். இந்நிலையில், தேர்தல் குறித்து காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமார் கூறியதாவது:
நான் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை மிகவும் மதிக்கிறேன். நான் அவரை எதிர்க்கவில்லை. ஆனால், அவரின் கொள்கையை எதிர்க்கிறேன்.
நாம் அனைவரும் நவீன இந்தியாவை குறித்து பேசி வருகிறோம். ஆனால் இந்த நவீன இந்தியாவோ சாதி, மதம் குறித்து பேசி வருகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் நாங்கள் இருவருமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களில் வேட்பாளர்களின் திறமை குறித்து தான் விவாதிக்கப்பட்டது.
ஆனால், முதன்முறையாக சாதியப் பேச்சு இப்போதுதான் எழுகிறது. இந்தியா நவீன வளர்ச்சியை அடைந்தாலும், மக்களின் மனநிலையில் இருந்து பழமை விலகவில்லை என்றார்.