சென்னை: தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் முடிவை கைவிட இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: - தமிழக மீனவர்களை பாதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு வலியுறுத்தும் என்றும் எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவை ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.