புதுச்சேரி: மனசாட்சியின்படி வாக்களித்தால் குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமார் தான் வெற்றி பெறுவார் என முதல்வர் நாராயணசாமி கூறியுளளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதுச்சேரி சட்டப்பேரவை கமிட்டி அறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். பின்னர் செய்திôயளர்களிடம் நாராயணசாமி கூறியதுச
குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்திற்கும், காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாருக்கும் 20 ஆயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. எனவே இத்தேர்தலில் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் கொள்கை, மனசாட்சியின் அடிப்படையில் வாக்களித்தால் மீராகுமார் வெற்றி உறுதி.
எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கூறியதாவது:
குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்திற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் திருமுருகன் சொந்த வேலையின் காரணமாக முன்கூட்டியே தனியாக வந்து வாக்களித்து சென்றுள்ளார்.
அ.தி.மு.க. சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன் கூறியதாவது:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க. துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவுப்படி பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்திற்கு வாக்கு அளித்துள்ளோம். இத்தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.