காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு கர்நாடகாவுக்கு எதிரானது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா வாதம்

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்  விசாரிக்கப்பட்டு வருகிறது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு கர்நாடகாவுக்கு எதிரானது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா வாதம்

புதுதில்லி:  காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்  விசாரிக்கப்பட்டு வருகிறது. முதலில் கர்நாடக அரசு தரப்பு வாதம் முன்வைத்து வருகிறது.

இன்றைய வாதத்தின்போது, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பால் நாங்கள் முழுவதுமாக வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என கர்நாடக அரசு வாதத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து அம்மாநில அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை தீர்ப்பாயம் கண்டுகொள்ளவில்லை எனவும் நிலத்தடி நீர்மட்டத்தை தவறுதலாக தீர்ப்பாயம் கணக்கிட்டதாகவும் கர்நாடகா குற்றம்சாட்டியது.

மேலும், தமிழகத்தில் 11ஆயிரம் ஏக்கர் நிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கர்நாடகாவில் 28ஆயிரம் ஏக்கர் நிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியது அம்மாநிலம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com